திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் எ.வ.வேலு தலைமையில் மனுக்கள் சமர்ப்பிப்பு

By செய்திப்பிரிவு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மனுக்களை பெறும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். திமுக பொருளாளர் டிஆர் பாலு எம்பி தலைமையில் துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மனுக்களை பெற்றனர். அவர்களிடம், எ.வ.வேலு தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வணிகர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை எம்எல்ஏக்கள் பிச்சாண்டி, கிரி, தலைமை செயற்குழு உறுப்பினர் தரன், மருத்துவர் கம்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

13 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்