சேலம் தனியார் நிறுவனத்தில் தீ

By செய்திப்பிரிவு

சேலம் அழகாபுரம் கைலாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52). இவரது வீட்டின் மேல் பகுதியில் ஷேர் மார்க்கெட் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு நேற்று அதிகாலை 12.45 மணிக்கு கரும்புகை வெளியேறியது. அருகில் இருந்தவர்கள் ராமச்சந்திரனுக்கு தகவல் கொடுத்தனர்.

அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தபோது நிறுவனத்தில் இருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தன.

தகவல் அறிந்து அங்கு சென்ற செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில், அங்கிருந்த 40 கணினிகள் மற்றும் பொருட்கள் தீயில் சேதமடைந்தன. இதுதொடர்பாக அழகாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

22 mins ago

க்ரைம்

29 mins ago

வணிகம்

33 mins ago

சினிமா

30 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

உலகம்

52 mins ago

வணிகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்