உ.பி. குஷிநகர் சர்வதேச விமான நிலையம் 20-ம் தேதி பிரதமர் மோடி திறக்கிறார் :

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பவுத்த சுற்றுலா பயணிகள் குஷிநகருக்கு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு அங்கு 590 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 29-வது சர்வதேச விமான நிலையமாகும்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பவுத்த துறவிகள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சில நாட்களுக்கு முன்பு குஷிநகருக்கு நேரில் சென்று விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். விழாவில் பங்கேற்க வரும் வெளிநாட்டு தூதர்கள், துறவிகளை சிறப்பாக வரவேற்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்