புதுடெல்லி: வடகிழக்கு பிராந்தியத்தில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் கரோனா தடுப்பூசி டெலிவரியை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தொடங்கி வைத்தார்.
வடகிழக்கு பிராந்தியத்தில் நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் ட்ரோன் மூலம் தடுப்பூசி டெலிவரி செய்யும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பிராந்தியத்தில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி டெலிவரியை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, “வர்த்தக அடிப்படையிலான ட்ரோன் சேவை மூலம் கரோனா தடுப்பூசி டெலிவரி செய்யப்படுவது தெற்கு ஆசியாவில் இது முதல்முறையாகும். வருங்காலத்தில் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்புவது, அத்தியாவசிய மருந்துகளை டெலிவரி செய்வது போன்ற பணிகளிலும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்” என்றார்.
ஐசிஎம்ஆர் சார்பில் ‘எச்எல்எல் இன்ஃப்ரா டெக்’ என்ற நிறுவனம் ட்ரோன் மூலம் தடுப்பூசி டெலிவரி பணியில் ஈடுபட உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
57 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
41 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
19 mins ago