மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்ப தாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,616 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட 5.6 சதவீதம் குறைவாகும். நாட்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் உயிரிழந்தனர்.
தினசரி பாதிப்பு அதிகமுள்ள கேரளாவில் புதிதாக 17,983 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 127 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 3,283 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 52 பேர் உயிரிழந்தனர். இம்மாநிலத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் உரிய பாதுகாப்பு விதிகளுடன் அக்டோபர் முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் புதிதாக 789 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 23 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டெல்லியில் புதிதாக 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதுமில்லை. பாசிட்டிவ் விகிதம் 0.03 சதவீதமாக குறைந்துள்ளது.
ராஜஸ்தான், குஜராத், பிஹார் ஆகிய 3 பெரிய மாநிலங்களில் கரோனா உயிரிழப்பு ஏதுமில்லை. உ.பி. மற்றும் ம.பி.யில் தலா ஒருவர் மட்டுமே இறந்துள்ளனர்.
மிசோரமில் அதிக பாதிப்பு உள்ளது. இங்கு புதிதாக 1,322 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அசாமில் 406 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத் துறை கூறியுள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
22 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
55 mins ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago