கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 39,056 ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.02 சதவீதமாகும். நாடு முழுவதும் குணமடைவோர் எண்ணிக்கை 97.65 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மட்டும் 15 லட்சத்து 27,420 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் களையும் சேர்த்து இதுவரை 54 கோடியே 92 லட்சத்து 29,149 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தினசரி பாசிட்டிவ் 2.25 சதவீதமாக உள்ளது. இது கடந்த 18 நாட்களாக தொடர்ந்து 3 சதவீதத்துக்கு கீழ் உள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 3 கோடியே 25 லட்சத்து 60,474 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.33 சதவீதமாக உள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 77.24 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரத் துறை புள்ளிவிவரத்தில் கூறப்பட் டுள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்