கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேருக்கு கரோனா : கேரளாவில் தொடர்ந்து அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 30,570 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கேரளாவில் மட்டும் 17,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை நாட்டில் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 47,325 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 43,928 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3 லட்சத்து 42,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றுக்கு சிகிச்சையில் குணமடைந்து கடந்த 24 மணி நேரத்தில் 38,303 பேர் வீடு திரும்பி உள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 60,474 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 76.57 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

15 mins ago

தமிழகம்

5 mins ago

சினிமா

13 mins ago

தமிழகம்

35 mins ago

க்ரைம்

51 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்