கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரஅமைச்சகம் நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா புதிய பாதிப்பு 31 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,941 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களாக பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டிய வந்தநிலையில் தற்போது நோயாளிகளின் பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3 கோடியே 27 லட்சத்து 68 ஆயிரத்து 880 ஆக உயர்ந்தது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று பாதிப்பு 19,622 ஆக குறைந்தது. மகாராஷ்டிராவில் 3,741, தமிழ்நாட்டில் 1,523 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பால் கேரளாவில் 132, ஒடிசாவில் 67, மகாராஷ்டிராவில் 52 பேர் உள்பட மேலும் 350 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,38,560 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் 36,275 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 59 ஆயிரத்து 680 ஆக உயர்ந்தது.

நாட்டில் தற்போது 3,70,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 64,05,28,644 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

45 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்