அமிர்தசரஸ்: பஞ்சாபில் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அவருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கருத்து மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதையடுத்து, காங்கிரஸ் மேலிடம் 18 அம்ச திட்டத்தை வகுத்து, சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக்கியது. எனினும், அமரிந்தர் சிங்கை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக சமூக வலைதளங்களில் விமர்சித்த சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாபில் தனது பலத்தை காட்ட, தனது ஆதரவு எம்எல்ஏ.க்களை வீட்டுக்கு அழைத்தார் சித்து. அதன்படி, அமிர்தசரஸில் உள்ள சித்துவின் வீட்டுக்கு நேற்று 40 எம்எல்ஏ.க்கள் குவிந்தனர். அதன்பின் பிற்பகலில் சொகுசு பஸ்களில் எம்எல்ஏ.க்களுடன் பொற்கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
முன்னதாக வழி நெடுகிலும் ஏராளமான ஆதரவாளர்கள் சித்துவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமானோர் சித்துவுக்கு நினைவுப் பரிசுகளும் அளித்தனர். இதனால் அமிர்தசரஸ் நகரமே நேற்று பரபரப்பாக இருந்தது.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 mins ago
தமிழகம்
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
2 hours ago