மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,506 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 3,08,37,222 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 895 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,040 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண் ணிக்கை 2,99,75,064 ஆக உயர்ந் துள்ளது. நேற்று ஒரே நாளில் 41,526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குண மடைந்தோர் சதவீதம் 97.20ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,54,118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த பாதிப்பில், 1.47 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 37,60,32,586 டோஸ்கள் தடுப்பூசி போடப் பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 43 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக 43 கோடியே 8 லட்சத்து 85 ஆயிரத்து 470 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
7 mins ago
சினிமா
25 mins ago
வாழ்வியல்
7 mins ago
தமிழகம்
43 mins ago
க்ரைம்
50 mins ago
வணிகம்
54 mins ago
சினிமா
51 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago