புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,733 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 930 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 6 லட்சத்து 63,665 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 4,211 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 47,240 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 59,920 ஆக குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை 2 கோடியே 97 லட்சத்து 99,534 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். வாராந்திர கரோனா பாசிட்டிவ் விகிதம் 2.39 சதவீதமாகவும் தினசரி பாசிட்டிவ் விகிதம் 2.29 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பாசிட்டிவ் விகிதம் தொடர்ந்து 16-வது நாளாக 3 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
கருத்துப் பேழை
29 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
13 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago