சட்டப்பேரவை தேர்தல்களில் - காங்கிரஸின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது : சோனியா காந்தி பேச்சு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடந்தது. கூட்டத்தில் சோனியா காந்தி கூறியதாவது:

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் விரை வில் தேர்தல் முடிவு பற்றி விவாதிக்கப்படும். இந்த தேர்தல் தோல்வியிலிருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பதை நேர்மையுடன் ஏற்க வேண்டும்.

நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நமது அரசு நிர்வாகம் தோல்வி அடையவில்லை. இந்தியாவுக்கு அதிகமான வலிமையும் வளமும் உள்ளது. அவற்றை பயன்படுத்தத் தவறிய பிரதமர் மோடி அரசுதான் தோல்வியடைந்து விட்டது. கரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங், ராகுல் காந்தி எழுதிய கடிதங்களால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இது அரசுக்கும் நமக்குமான போட்டி இல்லை. நமக்கும் கரோனாவுக்குமான போராட்டம். இந்த நேரத்தில் மக்களுக்கு சேவையாற்ற நம்மை மறுஅர்ப்பணிப்பு செய்து கொள்வோம். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்