பரூக் அப்துல்லாவுக்கு கரோனா பாதிப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை :

By செய்திப்பிரிவு

தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், முன்னாள் காஷ்மீர் முதல்வருமான பரூக் அப்துல்லா கடந்த மார்ச் 2-ம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதன் இரண்டாவது தவணையை அவர் ஏப்ரல் முதல் வாரத்தில் எடுத்துக் கொள்வதாக இருந்ததது.

ஆனால், அதற்குள்ளாக அவர் கரோனா வைரஸ் தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டார். பின்னர், மருத்துவர்கள் அறிவுரையின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பரூக் அப்துல்லா மருந்து, மாத்திரைகளை எடுத்து வந்தார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை சில நாட்களாக சற்று நலிவுற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அவரது மகன் ஒமர் அப்துல்லா ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

15 hours ago

மேலும்