நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட - நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு 8 உறுப்பினர்கள் நியமனம் : ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப் பட்ட குழுவுக்கு 8 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு நடை முறை 2017-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனினும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத் துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதை யடுத்து மருத்து வப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தர விட்டது. இதனால், சுமார் 400 மாணவர்கள் பயன் அடைந்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. தற் போது தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், நீட் தேர்வுக்கான மாற்று வழிமுறைகளை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.

அதன்படி, நீட் தேர்வால் ஏற் பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று கடந்த 5-ம் தேதி அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து கல்வியாளர்கள், அதிகாரிகள் என குழுவுக்கான 8 உறுப்பினர்கள் தற்போது நிய மனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவ மாணவர் சேர்க் கையில் நீட் தேர்வு முறையால் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதை சரி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், சட்டத்துறை செயலர், சுகாதாரத் துறை சிறப்புப் பணி அதிகாரி, மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் செயலர் மற்றும் மருத்துவர்கள் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் ஆகிய 8 பேர் உறுப்பினர்களாக செயல்படுவர்.

இந்தக் குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழகத்தில் பின்தங்கிய மாண வர்களின் நலன்காக்க தேவை யான பரிந்துரைகளை ஒருமாத காலத்துக்குள் அரசுக்கு அளிக் கும். அவற்றை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

வாழ்வியல்

36 mins ago

உலகம்

34 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

47 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்