இங்கிலாந்தில் 1880-களில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளுக்கு அடுத்ததாக அதிகம் பேரை கவர்ந்த ஆட்டமாக டேபிள் டென்னிஸ் உள்ளது.
1988-ம் ஆண்டுமுதல் ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் ஆடப்பட்டு வருகிறது.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு 1926-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் 226 நாடுகள் உள்ளன.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சீன வீரர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு ‘பிங் பாங்’ என்ற பெயரும் உண்டு.
கண்களை பாதிக்கும் என்று கூறி 1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை சோவியத் யூனியனில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் 2015-ம் ஆண்டு முதல் செல்லுலாய்டு பந்துக்கு பதிலாக பிளாஸ்டிக் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
2000-ம் ஆண்டு வரை டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஒரு செட் என்பது 21 புள்ளிகளை கொண்டதாக இருந்தது. பின்னர் அது 11 புள்ளிகளாக குறைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் வீரர்கள் உலகில் பல்வேறு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
49 mins ago
உலகம்
49 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
3 hours ago