விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை! :

By செய்திப்பிரிவு

சமீபகாலமாக, நடிகர் விஜய்யை வெவ்வேறு அரசியல் தலைவர்கள் போல சித்தரித்து அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இது இணையத்தில் பெரும்கிண்டலுக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி வந்தது. இந்நிலையில், அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதை கண்டித்தும், ரசிகர்களை எச்சரித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர் ஆர்வ மிகுதியாலும், ஆர்வக் கோளாறாலும் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர்களை வெளியிட்டு வருவது சமீபகாலமாக வழக்கமாகி வருகிறது.

சில ரசிகர்கள், இயக்கத்தினரின் இச்செயல்களை அவ்வப்போது விஜய் அனுமதியோடு கண்டித்துள்ளேன். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும், இயக்கத்தினர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வருத்தத்துக்கு உரியது. இதை விஜய்யும் விரும்புவது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், விஜய் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்