பெரிதாக ஜெயிக்கலாம்! சூர்யா அறிவுரை :

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு தொடர்பான பயத்தால் தமிழகத்தில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து, மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நடிகர் சூர்யா வெளியிட்டவீடியோ பதிவில் கூறியதாவது:

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே. உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே. மாணவ, மாணவிகள் அனைவரும் அச்சமின்றி நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு பரீட்சை உங்கள் உயிரைவிடப் பெரியது இல்லை.உங்கள் மனது கஷ்டமாக இருக்கிறதா.. நீங்கள் நம்புகிறவர்கள், உங்களுக்கு ரொம்ப பிடித்தவர்கள், அப்பா - அம்மா, நண்பர்கள், ஆசிரியர்கள் என்று யார்கிட்டயாவது மனம்விட்டு பேசுங்கள். இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாமே கொஞ்ச நேரத்தில் மறைகிற விஷயங்கள். தற்கொலை போன்றதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புகிறவர்களுக்கு, அப்பா - அம்மா, குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை.

நிறைய பரீட்சைகளில் நான் ஃபெயிலாகி இருக்கிறேன். ரொம்ப கேவலமான மார்க் வாங்கியிருக்கிறேன். எனவே, மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. சாதிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. நம்பிக்கை, தைரியம் இருந்தால் அனைவரும் வாழ்க்கையில் பெரிதாக ஜெயிக்கலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்