ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்அறிக்கையில்,
“நான் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியையும் வழிநடத்துவது அதிர்ஷ்டம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எனது பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அணி வீரர்கள், ஆதரவு ஊழியர்கள், தேர்வுக் குழுவினர், பயிற்சியாளர் மற்றும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் ஒவ்வொரு இந்தியர் ஆகியோர் இல்லாமல் என்னால்இதை செய்திருக்க முடியாது.
பணிச்சுமையைப் புரிந்துகொள்வது மிக முக்கியமான விஷயம்.மற்றும் கடந்த 8-9 ஆண்டுகளில்3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதையும், கடந்த 5-6 ஆண்டுகளாக தொடர்ந்து கேப்டனாக இருப்பதையும் கருத்தில் கொண்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாக தயாராக இருக்க, எனக்கு நானே இடம் கொடுக்க வேண்டும் எனநினைக்கிறேன். நான் டி20 கேப்டனாக இருந்த காலத்தில் அணிக்கு எல்லாவற்றையும் கொடுத்தேன்.
இந்த முடிவை எடுப்பதற்கு நிறைய நேரம் பிடித்தது. இதுபற்றி ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் விவாதித்த பிறகே இம்முடிவை எடுத்தேன். வரும் அக்டோபரில் துபாயில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன்பதவியில் இருந்து விலக முடிவுசெய்துள்ளேன். பிசிசிஐ தலைவர்கங்குலி, செயலாளர் ஜெய் ஷா,தேர்வுக் குழுவினரிடம் இதுபற்றிதகவல் தெரிவித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
53 mins ago
ஜோதிடம்
50 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago