அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில், மத்தியஅரசைக் கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
‘‘2019 மக்களவை தேர்தலின்போது பெகாஸஸ் ஸ்பைவேர் மென்பொருளைப் பயன்படுத்தி முக்கியத் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் நீதி விசாரணை நடத்தக் கோரியும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அமித் ஷா விலகக் கோரியும் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்குஆளுநர் மாளிகை வரை நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வேலை வாய்ப்பு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago