நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டத் தில், 1,000 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இயல் இசை நாடக மன்றம்
நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், 1,000 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இதன்மூலம், தமிழக அரசின்கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ் 2018-19 மற்றும் 2019-20ஆகிய 2 ஆண்டுகளுக்கு தலா500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் 1,000 நலிந்த கலைஞர்கள் பயனடைகின்றனர்.
நிதி உதவி 3 ஆயிரமாக உயர்வு
இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலாத் துறை செயலர் பி.சந்திரமோகன், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் வ.கலையரசி,தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றதலைவர் தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago