தமிழகத்தில் புதிதாக 20,421 பேருக்கு கரோனா தொற்று; 434 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 20,421 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 434 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகம் முழுவதும் 19 லட்சத்து 65,939 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்11,227, பெண்கள் 9,194 என மொத்தம் 20,421 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 2,645, ஈரோட்டில் 1,694, சென்னையில் 1,644, சேலத்தில் 1,071, திருப்பூரில் 1,068 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 37,233 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சையில் 2.44 லட்சம் பேர்

இதுவரை சென்னையில் 4 லட்சத்து 87,749 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 19 லட்சத்து 65,939 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 4,446 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 33,161பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் 31,539, சென்னையில் 21,404 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 434 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 50 பேர், கோவையில் 38 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27,005 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 7,475 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 16,628, கோவையில் 1 லட்சத்து 88,023, செங்கல்பட்டில் 1 லட்சத்து 46,673, திருவள்ளூரில் 1 லட்சத்து 4,904 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

2.87 கோடி பரிசோதனைகள்

தமிழகத்தில் 271 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 87 லட்சத்து 21,659பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 74,982 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கருப்பு பூஞ்சையால் 921 பேர் பாதிப்பு

வடமாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக கேட்டபோது, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், ஆலோசனை வழங்கவும் 13 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 921 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்