தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜுன் 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இணை செயலாளர் ஆர்.சி.மீனா, அனைத்துமாநிலங்களின் கல்வித் துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஆசிரியர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தேர்வில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விண்ணப்பங்கள் தேசிய குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுடைய ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் ஆன்லைனில் (https://nationalawardstoteachers.education.gov.in) ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான வழிகாட்டு முறைகளை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி நல்லாசிரியர் விருதுவழங்கப்படும். டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் இவ்விருதை வழங்குவார். கடந்த ஆண்டு 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப், சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
26 mins ago
சினிமா
31 mins ago
இந்தியா
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago