உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் மதுபான விற்பனையைத் தொடர்வது ஏன் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் கரோனா 2-ம் அலை தீவிரமாகப் பரவி வரும் சூழலில் கோயில்கள் மூடப்பட்டுள்ளன.கூட்டங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுபானக் கடைகளுக்கு மட்டும் எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கச் செய்யும் மதுபானங்கள் விற்கப்படுவதை அனுமதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.
பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில உள்துறைச் செயலர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
இந்தியா
13 mins ago
சுற்றுச்சூழல்
45 mins ago
தமிழகம்
35 mins ago
சினிமா
43 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago