மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு வரும்24-ம் தேதி முதல் நடைபெற இருந்த கணினிவழி தேர்வு, கரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் (மின்னியல்) 400 பதவிகளுக்கும், உதவி பொறியாளர் (இயந்திரவியல்) 125 பதவிகளுக்கும் மற்றும் உதவி பொறியாளர் (கட்டிடவியல்) 75 பதவிகளுக்கு வரும் 24, 25, மே 1, 2-ம் தேதிகளில் கணினி மூலம் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டது.
இதேபோல், இளநிலை உதவியாளர் (கணக்கு) 500 பதவிகளுக்கு மே 8, 9, 15 மற்றும் 16-ம்தேதிகளில் கணினி வழி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மேற்கண்ட கணினி வழி தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது.தேர்வு நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தொழில்நுட்பம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago