ஈரோடு, குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் - நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது : நீர்வள ஆதாரத் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கடந்த மார்ச் மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் இயல்பைவிட அதிகம் பொழிந்ததால், ஆயிரக்கணக்கான அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பின. மாநிலத்தில் பரவலாக நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.

தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறைமாதம்தோறும் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கிட்டு அறிக்கை வெளியிடுகிறது. அதன்படி, கடந்தஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. பிற மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 3.47 மீட்டர் உயர்ந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3.13 மீட்டரும்,பெரம்பூர் மாவட்டத்தில் 3.06 மீட்டரும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வேலூர் உட்பட 6 மாவட்டங்களில் 2 மீட்டருக்கு அதிகமாகவும், திருவள்ளூர் உட்பட 11 மாவட்டங்களில் 1 மீட்டருக்கு அதிகமாகவும் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்திருக்கிறது. மிகக் குறைவாக நாமக்கல் மாவட்டத்தில் 0.22 மீட்டர்மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்