கடந்த மார்ச் மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் இயல்பைவிட அதிகம் பொழிந்ததால், ஆயிரக்கணக்கான அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பின. மாநிலத்தில் பரவலாக நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.
தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறைமாதம்தோறும் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கிட்டு அறிக்கை வெளியிடுகிறது. அதன்படி, கடந்தஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. பிற மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 3.47 மீட்டர் உயர்ந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3.13 மீட்டரும்,பெரம்பூர் மாவட்டத்தில் 3.06 மீட்டரும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வேலூர் உட்பட 6 மாவட்டங்களில் 2 மீட்டருக்கு அதிகமாகவும், திருவள்ளூர் உட்பட 11 மாவட்டங்களில் 1 மீட்டருக்கு அதிகமாகவும் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்திருக்கிறது. மிகக் குறைவாக நாமக்கல் மாவட்டத்தில் 0.22 மீட்டர்மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
35 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago