தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை ஒரு பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 2 நாளில் மட்டும் ஒரு பவுனுக்கு ரூ.856 உயர்த்துள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் குறைந்து வந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் தங்களதுபணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின் றனர்.
ஒரே நாளில் ரூ.248 உயர்வு
சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்ந்து வருவதால், உள்ளூரிலும் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வரு கிறது. அதன்படி, கடந்த 2 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.856 உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.34 ஆயிரத்து 920-க்கு விற்கப்பட்டது.22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 365-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 334-க்கு விற்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago