தமிழகத்தில் 486 பேருக்கு கரோனா தொற்று முதியவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 486 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 281, பெண்கள் 205 என மொத்தம் 486 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 187 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 51,063 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 29,424 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 34,534 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 191 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 491 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 1,774 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 4,036 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இளம் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,493 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,152 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 35,350,கோவையில் 55,713, செங்கல்பட்டில் 52,719, திருவள்ளூரில் 44,200என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

16 mins ago

சினிமா

19 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

17 mins ago

சினிமா

35 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

29 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

43 mins ago

வலைஞர் பக்கம்

47 mins ago

சினிமா

52 mins ago

மேலும்