சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது தமிழகத்தில் புதிதாக 569 பேருக்கு தொற்று சென்னையில் 9 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு இல்லை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 569 பேருக்குகரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 341, பெண்கள் 228 என 569 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 168 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 34,740 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 24,417 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 17,520 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 225 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 642 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4,904 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதியவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,316 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,085 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 30,195,கோவையில் 54,021, செங்கல்பட்டில் 51,257, திருவள்ளூரில் 43,399 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 253 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை1 கோடியே 56 லட்சத்து 40,385 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.நேற்று மட்டும் 62,619 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்களுக்கு பிறகு..

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் கரோனா தொற்று பரவத்தொடங்கியது. ஆரம்பத்தில் தினமும் ஒற்றை இலக்கத்தில் பதிவாகிவந்த தொற்றின் பாதிப்பு, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. தினமும் 100-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தும், உயிரிழப்பு 30-க்கும் அதிகமாகவும் பதிவானது.

ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் 153 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 586 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னை, திருநெல்வேலியில் தலா ஒருவர் மட்டுமே உயிரிழந்தனர். நேற்று சென்னையில் 168 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 569 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கோவையில் 2 பேர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை,திருப்பூரில் தலா ஒருவர் என 7 பேர்உயிரிழந்துள்ளனர். சென்னையில் யாரும் உயிரிழக்கவில்லை. 9 மாதங்களுக்கு பின்னர் நேற்று சென்னையில் இறப்பு பதிவாகவில்லை.

மேலும் 5 பேருக்கு புதிய கரோனா

இதற்கிடையில், பிரிட்டனில் இருந்து வந்த 26 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இவர்களது சளி மாதிரிகளை புனே, பெங்களூரு ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், 4 பேருக்கு புதிய வகை உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், மேலும் 5 பேருக்கு புதிய கரோனா தொற்று தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்