உயர்கல்வி நிறுவனங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கை:
‘பராக்கிரம தினம்’
இந்திய சுதந்திரத்துக்காவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இணையற்ற பங்களிப்பை தந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை நினைவுகூரும் விதமாக ஜன.23-ம் தேதி, அவரின் பிறந்தநாள் விழாவை ‘பராக்கிரம தினம்’ என்ற பெயரில் தேசிய அளவில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாட்டுக்காக நேதாஜி செய்த தன்னலமற்ற தொண்டுகளை உயர்கல்வி மாணவர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் அளவில் நிகழ்ச்சிகள் நடத்த பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்துகிறது. தற்போது கரோனா பாதிப்பு காரணமாக காணொலி மூலம் நிகழ்ச்சிகளை உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளவேண்டும். அதில், நேதாஜியின் வாழ்க்கை வரலாறைகுறும்படமாகவும், ஆவணப்படமாகவும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தவேண்டும்.
அதேபோல், மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் நிறுவன நிர்வாகத்தினர் என அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் ஓவிய போட்டிகளும் நடத்த வேண்டும்.
மேலும், தங்களின் கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட நேதாஜியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகுறித்த தகவல்களை யுஜிசி போர்டலில் பதிவேற்றம் செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
34 mins ago
உலகம்
34 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago