கரோனா பரிசோதனை 1.50 கோடியை தாண்டியது புதிதாக 673 பேருக்கு தொற்று முதியவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 673 பேருக்குகரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 1.50 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 422, பெண்கள் 251 என மொத்தம் 673 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 192 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 28,287 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 22,272 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 9,392 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 233 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 821 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 2,042 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 6,653 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர்என நேற்று 6 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,242 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 28,368, கோவையில் 53,331, செங்கல்பட்டில் 50,710, திருவள்ளூரில் 43,118 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 249 அரசு மற்றும்தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 50 லட்சத்து 8,259 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 62,683பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்