தமிழகத்தில் புதிதாக 673 பேருக்குகரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 1.50 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இதுவரை சென்னையில் 2 லட்சத்து 22,272 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 9,392 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 233 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 821 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 2,042 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 6,653 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர்என நேற்று 6 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,242 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 28,368, கோவையில் 53,331, செங்கல்பட்டில் 50,710, திருவள்ளூரில் 43,118 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago