மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்புதளத்தில் சிலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில்,ரஜினிக்கு நேற்று முன்தினம் திடீரென ரத்த அழுத்தத்தில் வேறுபாடு காணப்பட்டதால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை முதல்வர் பழனிசாமி, ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்தியில், “முதல்வர் பழனிசாமி, ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்’’ என கூறப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
திருச்சி எம்பி. சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள செய்தியில், “ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். அவர் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
5 hours ago