இதுவரை 7.90 லட்சம் பேர் குணமடைந்தனர் ஒரேநாளில் 1,027 பேருக்கு கரோனா முதியவர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 1,027 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 615, பெண்கள் 412 என மொத்தம் 1,027 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 292, கோவையில் 95 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு 8 லட்சத்து 12,142 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 16,883 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 90,965 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 332 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,103 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 2,932 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 9,129 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 4 பேர், தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் என நேற்று 12 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,048 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 23,799, கோவையில் 51,791, செங்கல்பட்டில் 49,632, திருவள்ளூரில் 42,402 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 235 அரசு மற்றும்தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 37 லட்சத்து 95,803பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

59 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்