தமிழகத்தில் புதிதாக 2,487 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,529, பெண்கள் 958 என மொத்தம் 2,487 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 657, கோவையில் 220, செங்கல்பட்டில் 151, ஈரோட்டில் 110, திருவள்ளூரில் 107, சேலத்தில் 103 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 34,429 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 1 லட்சத்து 92,631 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 4,031 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 844 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,504 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 6,182 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 19,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
30 பேர் உயிரிழப்பு
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 17 பேர், தனியார் மருத்துவமனைகளில் 13 பேர் என நேற்று 30 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,244 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,682 பேர் இறந்துள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 2,495,செங்கல்பட்டில் 44,296, கோவையில் 44,209, திருவள்ளூரில் 38,323 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 203 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 2 லட்சத்து 45,248 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும்75,331 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 26,124 குழந்தைகள், 13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 17,201 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 91,104 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
44 mins ago
ஜோதிடம்
54 mins ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago