விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சார விநியோக நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம், விவசாயத்துக்கு மும்முனை இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 21 லட்சம் விவசாய இணைப்புகள் உள்ளன. விவசாயத்துக்கு தினமும்6 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் காலை 6 முதல் மதியம் 12 மணி வரையும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் மதியம் 12 முதல் மாலை 6 மணி வரையும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
நவ.1 முதல் அமல்
இந்நிலையில், இலவச மின்சாரம் வழங்கும் நேரத்தை மின்வாரியம் மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் காலை 8.30 முதல் மதியம் 2.30 மணி வரை வழங்கப்படும்.டெல்டா அல்லாத மாவட்டங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் காலை9 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், 2-வது பிரிவில் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் மின்விநியோகம் செய்யப்படும். புதிய நேர மாற்றம் நவ.1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
16 mins ago
இந்தியா
10 mins ago
தமிழகம்
27 mins ago
வாழ்வியல்
18 mins ago
இந்தியா
32 mins ago
தமிழகம்
53 mins ago
சினிமா
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago