தமிழகத்தில் விவசாயத்துக்கான இலவச மின் விநியோக நேரம் மாற்றம்

By செய்திப்பிரிவு

விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சார விநியோக நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், விவசாயத்துக்கு மும்முனை இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 21 லட்சம் விவசாய இணைப்புகள் உள்ளன. விவசாயத்துக்கு தினமும்6 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் காலை 6 முதல் மதியம் 12 மணி வரையும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் மதியம் 12 முதல் மாலை 6 மணி வரையும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

நவ.1 முதல் அமல்

இந்நிலையில், இலவச மின்சாரம் வழங்கும் நேரத்தை மின்வாரியம் மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் காலை 8.30 முதல் மதியம் 2.30 மணி வரை வழங்கப்படும்.

டெல்டா அல்லாத மாவட்டங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் காலை9 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், 2-வது பிரிவில் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் மின்விநியோகம் செய்யப்படும். புதிய நேர மாற்றம் நவ.1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

27 mins ago

வாழ்வியல்

18 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்