தாய்லாந்தின் பான்சாங் நகரில் ஆசிய படகு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று ஆடவருக்கான இலகுரக ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்விந்த் சிங் பந்தய தூரத்தை 7:55.942 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.
அதேவேளையில் ஆடவருக்கான லையிட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் ஆஷிஸ் புகட்,சுக்ஜிந்தர் சிங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆடவருக்கான 4 பேர் கொண்ட ஸ்கல்ஸ் பிரிவில் பிட்டு சிங், ஜகர்கான், மன்ஜித் குமார், சுக்மீட் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. இந்தத் தொடரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
37 mins ago
வாழ்வியல்
28 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago