அனைவருக்கும் வங்கி கணக்குமற்றும் ஏழைகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அவசியமில்லாத வங்கிக் கணக்கு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டது ஜன் தன் வங்கிக் கணக்கு.
மும்பை ஐஐடி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கடந்த 2017-ம்ஆண்டு முதல் 2020ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்குகளிலிருந்து பாரத ஸ்டேட் வங்கி பரிவர்த்தனை கட்டணமாக ரூ.164 கோடி வசூலித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறும் செயல் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தப்பணத்தை வாடிக்கையாளர் களுக்குத் திருப்பித் தர மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை ரூ.90 கோடி மட்டுமே திருப்பி தந்துள்ளது.
இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜன் தன் கணக்கில்உள்ள பணத்தை வைத்திருப்பவர்களுக்கு யார் பொறுப்பு” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
14 hours ago