மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சமீபத்தில்வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021-22 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் பணியாளர் சேமநல நிதி (பிஎப்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக இணைந்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 12.61 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது 2021 ஆகஸ்ட் மாதத்தில் 14.81 லட்சம் பேர் பிஎப்திட்டத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.
இதில் சுமார் 9.19 லட்சம் பேர் முதல் முறை சந்தாதாரர்கள். 20 சதவீதத்தினர் பெண்கள். இந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தை விடவும் ஆகஸ்ட்டில் 10.18 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் பிஎப் திட்டத்திலிருந்து ஏற்கெனவே வெளியேறிய 5.62 லட்சம் பேர் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் வேலையிழப்பு ஏற்பட்டதால் பலர் பிஎப் அமைப்பிலிருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
12 mins ago
சுற்றுச்சூழல்
40 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago