ஒடிசாவைச் சேர்ந்தவரிடம் ரூ.89 ஆயிரத்தை மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டம் கெசிங்கா பகுதியைச்சேர்ந்தவர் விவேக் அகர்வால்.இவர், தனக்கு ஒரு இன்ஸ்டிடியூட்டிலிருந்து வரவேண்டிய புத்தகங்கள் தொடர்பாக கூரியர் நிறுவனம் ஒன்றின் நுகர்வோர் எண்ணுக்கு செல்போன் மூலம் டயல் செய்துள்ளார்.
அது தவறுதலாக வேறு ஒருசெல்போன் எண்ணுக்குச் சென்றுவிட்டது. அதை பயன்படுத்திய சைபர் குற்றவாளிகள் சிலர் விவேக்அகர்வாலின் கணக்கிலிருந்து ரூ.89 ஆயிரத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து போலீஸில் விவேக் அகர்வால் புகார் கொடுத்தார்.
போலீஸார் விசாரணை நடத்திஜார்க்கண்ட் மாநிலம் ஜம்டாராவைச் சேர்ந்த ரயீஸ் அன்சாரி, முகமது சஜ்ஜத், அப்துல் அன்சாரி ஆகியோரை அண்மையில் கைது செய்தனர். இதுகுறித்து கலஹண்டி போலீஸ் எஸ்.பி. விவேக் எம்.சரவணா கூறும்போது, “விவேக் அகர்வாலின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.89 ஆயிரத்தை பேடிஎம், வங்கி டிரான்ஸ்பர் ஆகியவற்றின் மூலம் திருடியுள்ளனர். அகர்வாலின் செல்போன் எண்ணுக்கு ஒரு இன்டர்நெட் லிங்க்கை அனுப்பி அதன்மூலம் பணத்தை அவர்கள் திருடியுள்ளனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
35 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago