நாடு முழுவதும் புதிதாக 33,376 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதார அமைச்சகம் கரோனா தொடர்பான தகவல்களை தினமும் புதுப்பித்து வருகிறது. சனிக்கிழமை காலையில் புதுப்பிக்கப்பட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.32 கோடியாக அதிகரித்துள்ளது. இதுபோல 24 மணிநேரத்தில் கரோனாவால் 308 பேர்உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 317 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரில் 1.18 சதவீதம் ஆகும். 97.49 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் குறைந்தது

கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கு கீழ் பதிவாகி வருகிறது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழ் பதிவாகி வருகிறது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்