மீராபாய் சானுவுக்கு : வாழ்நாள் முழுவதும் பீட்சா டோமினோஸ் அறிவிப்பு :

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்சா வழங்கப்படும் என டோமினோஸ் உணவகம் அறிவித்துள்ளது.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் சானு, பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் இதுவாகும்.

இதனிடையே, இந்த வெற்றி தொடர்பாக மீராபாய் சானு, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘‘ஒலிம்பிக் பயிற்சிக்காக பல மாதங்களாக நான் டயட்டில் இருந்ததால், பீட்சா சாப்பிட வேண்டும் என விரும்புகிறேன்’’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இவரது இந்தப் பேட்டியை டோமினோஸ் நிறுவனத்துக்கு டேக் செய்த ட்விட்டர் பயனர் ஒருவர், மீராபாய் சானு இந்தியா திரும்பியதும், அவருக்கு பீட்சா வழங்குமாறும் இதற்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இதைப் பார்த்த டோமினோஸ் நிறுவனம், “இந்திாயாவுக்கு பெருமை சேர்த்திருக்கும் மீராபாய் சானுவுக்கு அவரது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்சா வழங்க முடிவு செய்துள்ளோம்’’ எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்