ஆபாச பட தயாரிப்பில் ராஜ் குந்த்ரா ஈடுபடவில்லை என அவரது மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆபாச படங்களைத் தயாரித்து அதை ‘ஹாட்ஷாட்ஸ்’ என்ற செயலியில் வெளியிட்டு பணம் சம்பாதித்தாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் தொழிலதிபரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். இவர்களின் போலீஸ் காவல் வரும் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடம் மும்பை குற்றப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அப்போது ஷில்பா ஷெட்டி அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. “ஹாட்ஷாட் செயலி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அந்த செயலியில் இடம்பெற்றுள்ள தகவல், வீடியோ குறித்தும் எதுவும் தெரியாது. எனது கணவர் ராஜ் குந்த்ரா எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. அபாச படத் தயாரிப்புக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லண்டன் போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியும் ராஜ் குந்த்ராவின் மைத்துனரும் பிரதீப் பக்சிதான் அந்த செயலியை உருவாக்கி நடத்தி வந்தார்” என ஷில்பா வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
36 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
31 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
சினிமா
3 hours ago