பெல்ஜியம் ஜெர்மனியில் வெள்ளம் : 168 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

இதேபோல பெல்ஜியத்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகள் இடிந்து விழுந்ததாலும், வெள்ளத்தில் சிக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. மீட்பு பணிதொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாசன்பெர்க் அணை உடைந்ததால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 700 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆகஉயர்ந்துள்ளது. ஜெர்மனியில் 141 பேரும், பெல்ஜியத்தில் 27 பேரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்