தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் நேற்று முக்கிய கட்சித் தலைவர் கள் கூடி ஆலோசனை நடத்தினர். தேசிய அளவில் 3-வது அணியை அமைப்பது தொடர்பாக ஆலோ சனை நடந்ததாகத் கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் தலைவர் சரத் பவாரை கடந்த 11-ம் தேதி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மும்பையில் சந்தித்து பேசினார். 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு எதிராக செயல்படுவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சரத் பவாரைபிரசாந்த் கிஷோர் நேற்றுமுன்தினம் மீண்டும் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு சரத் பவார் நேற்று அழைப்பு விடுத்தார்.
இதன்படி டெல்லியில் உள்ளசரத் பவார் வீட்டில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரி உட்பட 8 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, மஜித் மேமன், தேசியவாத காங்கிரஸின் வந்தனா சவுகான், ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரி, சமாஜ்வாதி கட்சியின் கண்ஷியாம் திவாரி, ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா. முன்னாள் தூதர் கே.சி. சிங், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ்துளசி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் அடுத்த ஆண்டுநடைபெறவுள்ள உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தபுதிய அணியை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக் கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல்கூறும்போது, “தேசிய அளவிலான அமைப்பை உருவாக்கும் முனைப்பில் யஷ்வந்த் சின்ஹா ஈடுபட்டுள்ளார். அவர்தான் சரத் பவாரை சந்திக்க வந்தார். இது தேசிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான கூட்டம்தான். தேசிய அளவில் 3-வது அணியை அமைப்பதற்கான கூட்டம் அல்ல” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
வாழ்வியல்
42 mins ago
உலகம்
40 mins ago
தமிழகம்
50 mins ago
இந்தியா
53 mins ago
சினிமா
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago