2-வது தொகுப்பு ‘ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகள் இந்தியா வந்தன :

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா பரவலை தடுப்பதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள், கடந்த ஜனவரி மாதம் முதலாக பயன்பாட்டில் உள்ளன. ஆனாலும் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனிடையே, ரஷ்யாவில் கரோனா தொற்றை திறம்பட கட்டுப்படுத்தியதாக அறியப்பட்ட ‘ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை, இந்தியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது.

இதன்பேரில், அந்த தடுப்பூசிகள் முதல்கட்டமாக கடந்த 1-ம் தேதி ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து இரண் டாவது தொகுப்பு ‘ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகள் நேற்று ஹைதராபாத் வந்தடைந்தன. இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் ‘ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்