ஒடிசா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. எனினும் ஞாயிற்றுக்கிழமை சற்று குறைந்தது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 622 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் குணமடைந்தோர் தவிர 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 2,068 ஆனது.
இதையடுத்து, வரும் 5-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சிறப்பு நிவாரணத் துறை ஆணையர் நேற்றுபிறப்பித்தார். கடும் கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் போக்குவரத்து சிலவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில்இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
37 mins ago
இந்தியா
46 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago