இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியின் தந்தை பான் சிங், தாய் தேவி ஆகிய இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ராஞ்சியில் உள்ள பல்ஸ்சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நலம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தோனியின் பெற்றோருக்கு பரிசோதனையில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
சுற்றுலா
6 hours ago