டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்கதேச ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.
நாட்டின் 72-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் ராணுவ வலிமை, கலாச்சாரத்தை பறைசாற்றும் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில் முதல் முறையாக வங்கதேசத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து வங்கதேச ராணுவ கர்னல் முகதீசும் ஹைதர் சவுத்ரி கூறும்போது, ‘‘வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமானின் 100-வது பிறந்த தின ஆண்டை கொண்டாடி வருகிறோம். மேலும் வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். கடந்த 1971-ம் ஆண்டு போரின் போது பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி வங்கதேசத்துக்கு இந்தியா விடுதலை பெற்றுக் கொடுத்தது. இதற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கிறோம். வங்கதேச ராணுவம், கடற்படை, விமானப் படையை சேர்ந்த 113 வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago