காங்கிரஸில் 6, 7-ல் நேர்காணல்

By செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்தவர்களிடம் வரும், 6, 7 தேதிகளில் சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய திக்விஜய் சிங் தலைமையில் பிரான்சிஸ்கோ சர்டின்கா, கொடிக்குன்னில் சுரேஷ், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் வி.நாராயணசாமி, தமிழகம், புதுச்சேரிக்கு பொறுப்பு வகிக்கும் அகில இந்தியச் செயலாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 secs ago

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்