மதுரை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள 11 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர்.
துபாயில் இருந்து நேற்று முன்தினம் மதுரைக்கு வந்த விமான பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் 46 பயணிகள் உரிய அனுமதியின்றி 11 கிலோ தங்கம் கொண்டுவந்தது தெரிந்தது.
தங்கத்துக்கு உரிய வரியை செலுத்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் அறிவுறுத்தினர். அவர்கள் வரியை செலுத்த தவறியதால் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வருவாய் புலனாய்வு பிரிவினர் கூறும்போது, ‘6 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் 70 கிராம் தங்கம் வரை வெளிநாடுகளில் இருந்து ஒருவர் கொண்டு வரலாம். இதற்கு மேல் கொண்டு வரும் ஒவ்வொரு கிராமுக்கும் உரிய வரியை செலுத்தவேண்டும்.
வரியை செலுத்த தவறினால் பறிமுதல் செய்யப்படும் தங்கம் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். வரியை செலுத்தினால் உரியவர்களிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
22 mins ago
உலகம்
20 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
33 mins ago
சினிமா
39 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago