எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது: இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

By செய்திப்பிரிவு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த குணசேகரனின் விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த வினித், கந்தசாமி, சிவபெருமாள், சண்முகராஜ், பிரதீப், செல்வம், அபிஷேக், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த குணா, அஜித்குமார், தர்மராஜ் ஆகிய 10 பேர் கடந்த 5-ம் தேதி நள்ளிரவு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு கரை திரும்ப தயாரானபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கைது சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனை நேற்று சந்தித்த மீனவ கிராம பஞ்சாயத்தார், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்